மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய விபத்து சம்பவம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வேன், கார் மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த பாரிய விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் எங்கு சென்றுள்ளார் என்று தெரியாத நிலையில் பொலிஸார் தேடுதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு மணி நேரமாக கல்லடி பாலம் ஊடாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பழைய கல்முனை வீதியுடாக போக்குவரத்துகள் நடாத்தப்பட்டன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
0 comments: