Home » » ஓமந்தையில் பால் பவுசஸருடன் மோதியது பஸ்! - 24 பேர் காயம்

ஓமந்தையில் பால் பவுசஸருடன் மோதியது பஸ்! - 24 பேர் காயம்

ஏ-9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், இன்று காலை 6.10 மணியளவில் ஒமந்தை பகுதியில் பால் பவுஸருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 24 பேர் காயமடைந்தனர். வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், ஓமந்தை - பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பால் பவுஸருடன் மோதி, விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்ஸில் பயணித்த 24 பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, கடந்த 5 நாட்களுக்கு முன்னர், ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தாண்டிக்குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்நிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |