Advertisement

Responsive Advertisement

தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஊருக்குள் நடமாடும் தேங்காய் வாகனங்கள் : ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
தேங்காய் விலை அதிகரிப்பு பற்றி உடனடியாக கவனம் செலுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

Post a Comment

0 Comments