Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம்

2015ஆம் ஆண்டு ஒக்­ரோ­ப­ரில் ஜெனிவாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் இலக்­கு­களை நிறை­வேற்­று­மாறு இலங்­கைக்கு ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் உறுப்பு நாடு­கள் உட­ன­டி­யாக அழுத்­தம் கொடுக்க வேண்­டும் என்று மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
  
இலங்கை விட­யத்­தில், பல்­வேறு நல்­லி­ணக்­கப் பணி­ய­கங்­களை அமைப்­ப­தும், முன்­னேற்­றங்­கள் பற்­றிப் பேசு­வ­தும், 2015ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இணையா­னது அல்ல, என்ற விட­யத்­தில், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் உள்ள அர­சு­கள் தெளி­வாக இருக்க வேண்­டும் என்று மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கத்­தின் தெற்­கா­சி­யப் பிராந்­தி­யத்­துக்கான பணிப்­பா­ளர் மீனாட்சி கங்­குலி தெரி­வித்தார்.
‘நீண்­ட­கா­ல­மா­கப் பாதிக்­கப்­பட்ட இலங்­கை­யர்­கள், தீர்­மா­னம் முழு­மை­யாக நடை­மு­றைப்­படு த்தப்­ப­டு­வ­தைக் காணவேண்­டிய தேவை உள்­ளது. நீதி கிடைப்­ப­தற்கான ஆதா­ரங்­களை அவர்­கள் காண வேண்­டும்.ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் ஒரு­ம­ன­தான நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் இலங்கை பெரு­ம­ள­வில் தோல்­வி­அடைந்­துள்­ளது. மனித உரி­மை­கள் தொடர்­பாக மொழி­யால் பேசு­வதை விட, அதி­க­மா­கச் செய்ய முடி­யும் என்­பதை இலங்கை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments