Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கும்?’ - ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பி.கே.ரிசர்ச் அசோசியேஷன் ஃபார் இ.எஸ்.பி. என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கேரள மாநிலம், பாரசாலாவில் இயங்கி வரும் பி.கே.ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பாபு கலயில் என்பவர்தான் இந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் அவர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ’ இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.


இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று விசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments