Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியின் ஆசிரியர் திரு.க.யோகேந்திரராசா அவர்கள் 26 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்


இவர் 30.09.1957ல் மட்/பழுகாமத்தில் பிறந்த இவர் 60வது வயதை நாளை கொண்டாடுகின்றார்.  தனது முதல் நியமனத்தை 1991 ம் ஆண்டு பெற்றுக் கொண்டு மட்/கன்னங்குடா ம.வில் ஆசிரியராகக் கடமையேற்றார்.  இங்கு 3 வருடங்கள் கடமையாற்றினார். பின் மட்/பெரிய கல்லாறு ம.கல்லூரியிலும், பட்டிருப்பு தே.பாடசாலையிலும்,  சிவானந்தா தே.பாடசாலையிலும் ஓய்வு பெறும் வேளையில் பட்டிருப்பு தே.பாடசாலையிலும் கடமையாற்றினார். ஆசிரியர் சேவையில் 26 வருடங்கள் இவர்  சேவையாற்றியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. செய்முறைக் கற்பித்திலில் விஞ்ஞான பாடத்தில் தேர்ச்சி பெற்ற இவர் பல புத்தாக்கங்களை படைத்துள்ளார். இதில் இரண்டு விறகு அடுப்பு,  நுளம்புபுத்திரி, மின் பகுப்பு உபகரணம், பிளமிங்கின் இடக்கை விதி உபகரணம், யுரேக்கா கிண்ணம் என்பன  அடங்கும். இவரின் சேவைகளையும், திறமைகளையும் பிரதி அதிபர்கள், அசிரியர்கள்  , மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள்  பாடசாலை ஒன்றுகூடலில் நினைபடுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 






Post a Comment

0 Comments