குறித்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு இலகுவாகவும் , மலிவாகவும் கிடைக்கும் காரணத்தால் , அன்றாட வாழ்வில் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை பயன்பieடுத்த அநேகமானோர் விரும்புகின்றனர்.
பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நபரால் 7 கிலோகிராம் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லன்ச் சீட் மற்றும் சொப்பிங் பைகள் போன்ற உற்பத்திகளே பொதுமக்களிடம் இருந்து சூழலுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இவைகள் மக்கிப்போகாததால் சூழலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments