வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.
தாம் பதவி விலகியதனால் ஏற்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு நிரந்தர அடிப்படையில் எவரையும் நியமிக்க வேண்டாம் என ரவி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார் என கொழும்பு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கண்டியில் நடைபெற்ற விசேட மத வழிபாட்டு நிகழ்வுகளில் பிரதமருடன் ரவி கருணாநாயக்கவும் இணைந்து கொண்டிருந்தார்.
இதன் போது நிரந்தர அடிப்படையில் வெளிவிவகார அமைச்சுப் பதவியை எவருக்கும் வழங்க வேண்டாம் என அவர் பிரதமரிடம் கோரியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுப் பதவி சாகல ரட்நாயக்கவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு மாதங்களில் மீளவும் அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற பிரதமரின் உறுதிமொழியை அடுத்தே ரவி கருணாநாயக்க தமது பதவியை ராஜினாமா செய்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தற்காலிக அடிப்படையில் இந்தப் பதவியை திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்க பிரதமர் இணங்கியுள்ளதாகவும் குறித்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments