Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பை அச்சுறுத்தும் மர்மக் கும்பல்! அதிரடிப் படையினர் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பாரிய கொள்ளையில் ஈடுபடும் நடமாடும் கொள்ளை குழு தொடர்பில் முதன்முறையாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு புத்தளம் வீதி குரண பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் காயமடைந்த இருவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் ஆதரவாளர்கள் இருவர் வெளியிட்ட தகவல்களுக்கமைய இந்த நடமாடும் கொள்ளை குழு தொடர்பான தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணம் கொண்டு வரும் எந்தவொரு நபர் தொடர்பிலும் இந்த குழுவுக்கு தகவல் கிடைத்து விடும்.
அதற்கமைய வாகனத்தில் நடமாடும் சேவையில் ஈடுபடும் இந்த குழு உரிய நேரத்தில் அந்த இடத்திற்கு சென்று அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு வானகத்தின் இலக்கத் தகட்டினை மாற்றி விட்டு தப்பி சென்று விடுகின்றனர்.
இந்த நடமாடும் கொள்ளை குழுவிற்கு துப்பு வழங்குவர்கள் பாரியளவு பணப் புழக்கமுள்ள இடங்களில் சேவை செய்வதாக தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments