Home » » தொடரும் அனர்த்தம் - அடைமழை பெய்யும் என திணைக்களம் எச்சரிக்கை

தொடரும் அனர்த்தம் - அடைமழை பெய்யும் என திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் பலத்த காற்றும் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட கூடும் என வானிலை ஆய்வாளர் ஷமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அடைமழையில் மந்த நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தென்மேற்கு பகுதிகளில் நாளை முதல் மழை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டை சுற்றி கடல் பிரதேசங்களில் இன்றை தினம் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் மற்றும் மீனவ மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |