(எஸ்.ஸிந்தூ)
முதல் மனைவியின் பதிவு திருணத்தை மறைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டமை சம்பந்தமாக காலபடிவம் சேர்ந்த செல்வம் தயாளன் என்பருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தும் தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்பளித்துள்ளார்.
2010/10/26 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பின்பு இன்று(26.01.2017) தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு திருமணத்தின் பின்பு முதல் மனைவியை கைவிட்டு பதிவுத் திருமணம்செய்துள்ள போதும் 2009ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடதக்கவிடயம்
0 comments: