Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிங்கமலை காட்டுப்பகுதிக்குள் தீ;பல ஏக்கர்கள் எரிந்து நாசம்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டிக்கோயா நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் சிங்கமலை பாதுகாப்பு வனப்பிரதேசத்தினுள் ஏற்பட்ட தீயினால் பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்பொழுது மத்திய மாகாணத்தில் வறட்சியான காலநிலை காணப்படுவதனால் தீ வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தீயின் காரணமாக இங்கு காணப்படும் அரிய வகை தாவரங்கள் , விலங்குகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தீயினால் நீரூற்றுக்கள் அற்றுப் போவதனால் எதிர்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
இத்தீ காட்டுமிருகங்களை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments