உலகத்தில் வாழும் முஸ்லிங்கள் பல இடங்களிலும் தாக்கப்பட்டு அழிந்து கொண்டிருப்பதனை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பட்டினமும் பள்ளிவாலில் இருந்து ஜிம்மா தொழுகைக்கு பின்னர் அக்கரைப்பற்று இளைஞர்களால் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்ட பேரணியானது பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகி கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இளைஞர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் பிரதான வீதியால் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி துவா செய்ததன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து கூறுகையில்.
உலக முஸ்லிங்களுக்கான கொடுமையினை பார்த்து விட்டு வெறுமனே இருந்து விட்டு போகாமல் அவர்களுக்கான எமது முழு ஆதரவினையும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை செய்திருக்கின்றோம் நாங்கள் எப்பவும் இன்று துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் எமது சகோதரர்களுடன் கூடவே இருக்கின்றோம் உங்களுககா நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பல நாடுகளில் இன்றும் முஸ்லிங்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் வரகின்றது அதனை கண்டும் காணாமலும் ஒரு சராசரி மனிதராக இராமல் நாமும் அவர்களுக்கு இறைவனை பிரார்த்திக்கின்றோம் எனவும் இன்னுமொருவர் கருத்துரைக்கையில் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களை முஸ்லிம் நாடுகளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எதிராகவும் நாங்கள் இன்று இந்த பேரணியை செய்திருக்கின்றோம் எனவும் கூறினார்.
இங்கு கலந்து கொண்டோர் கைகளில் சர்வதேசமே எப்போது விளிப்பாய்? ஓர் உடலாக ஒரு உயிராக என்றுமே ஒன்றாக எனும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கிச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.



0 Comments