Advertisement

Responsive Advertisement

ஜெர்மனில் கூட்டத்திற்குள் புகுந்த லாரி: 12 பேர் சாவு

ஜெர்மனில் மக்கள் கூட்டத்தில் லாரி புகுந்தததில் 12 பேர் பலியாகினர்.ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்குள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 48 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments