கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அச்சுறுத்தல் காணப்படுவதாக க சுகதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு ,கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் இந்த மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த பத்து மாவட்டங்களிலும் 30 சுகாதார வைத்திய பிரிவுகளின் பணியாளர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுளளதாகவும் சுசுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டமொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினை தேவையான வகையில் பயன்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டதை நடைமுறைப்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு 25 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் இந்த மதிப்பீட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கட்டமைப்பை துப்பரவு செய்யும் நடவடிக்கை திருப்திகரமாக இடம்பெறுவதில்லை. இதற்காக முறையான வேலைத்திட்டத்தை பாடசாலை அதிபர்கள் மேற்கொள்வதற்கு தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியிலல் நாடு பூராகவும் 47834 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த நோய் தாக்கம் காரமாக 74 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments