Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் 3 நாட்களின் பின் பாதுகாப்பாக மீட்பு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமற் போன ஐவரும் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், இவர்களை வழிகாட்ட சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளி ஆகிய ஐந்து பேரும், எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமல் போனதாகவும் அவர்களைத் தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவம், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடந்த 3 நாட்களாக தேடியும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 13.12.2016 அன்று இரவு 10 மணியளவில் சென்ற அதிரடி படையினர் எமில்டன் பாதுகாப்பு வனப்பகுதியான ரதபொட் எனும் இடத்தில் இவர்களை கண்டுபிடிக்கப்பட்டு 14.12.2016 அன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டனர்.
12.12.2016 அன்று மதியம் மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். 12.12.2016 அன்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் ஐவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
வழிகாட்டி – கிருஷ்ணசாமி (வயது 56), தோட்ட முகாமையாளர்களின் உறவினர்களான காவிந்த திசேரா (வயது – 22), மிகார விக்கிரமசிங்க, (வயது – 31) பியூமி கல்பனிவன்ச (வயது – 23) சமித்தா விக்கிரமசிங்க (வயது – 55) ஆகியோர இவ்வாறு காணாமல் போய் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.IMG_6413Kaavindapiumi

Post a Comment

0 Comments