யாழ். செம்மணி மயானத்தை நெருங்கிய பகுதி மற்றும் பருத்தித்துறை குடத்தனை மயானம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 60 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிராந்திய விஷேட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் யாழ். செம்மணி சுடலை பகுதியிலும் வெளிமாவட்டம் ஒன்றுக்கு கடத்தி செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ நிறையுடையதாக காணப்பட்டதாகவும், இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 30இலட்சம் ரூபாய் எனவும் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments