Home » » பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை

ரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |