Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் பதற்றம்..! கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராமத்தில் சற்று முன்னர் கடற்படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் நபர் ஒருவர் செல்ல முற்பட்டடுள்ளார்.

எனினும், வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்துள்ளனர்.

எனினும், குறித்த நபரை காப்பாற்றும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பிடிக்கப்பட்ட குறித்த நபர் கடற்படையினை சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபரை தடுத்து வைத்துள்ளனர். தற்போது பொலிஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். எனினும் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது எனவும், மன்னார் நீதவானிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments