Advertisement

Responsive Advertisement

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்  சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 02ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று  உத்தரவிட்டுள்ளார்.
2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments