Advertisement

Responsive Advertisement

சூறாவளியால் ஹெய்டியில் 300 பேர் பலி

மத்தியு சூறாவளியால் ஹெய்ட்டியில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.செவ்வாய்கிழமை ஹெய்டியை மணிக்கு 145 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளி காரணமாக 3200 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன் 15000 இடம்பெயர்ந்துள்ளனர், பெருமளவு விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளது.
பல இடங்களில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் வெள்ளத்தின் அளவு குறைவடையத்தொடங்க மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments