Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

போராளிகள் மீது அனைத்துலக மருத்துவ பரிசோதனை: வலியுறுத்தி ஜேர்மனியில் போராட்டம் (வீடியோ)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மர்மமாக மரணமடைவதை வெளிப்படுத்தும் வகையில் பேர்ளினில் உள்ள ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் முன்பாக தமிழ் அமைப்புக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. அனைத்துலக மருத்துவ பரிசோதனை அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
99
93
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர்.96
98இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும், பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை மாலை 16:30 மணிக்கு நடைபெற்றது. இவ் நிகழ்வில்  சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும்,
94
95ஜேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் பதாதைகளை தாங்கியவண்ணம், இவ்விடையம் சார்ந்து இளையோர்களால் ஒலிபெருக்கியில்  கருத்துக்கள் வாசிக்கப்பட்டு, இறுதியில் வெளிவிவகார அமைச்சுக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
92மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்வதைகளை,உயிர்க்கொலைகளை நிறுத்த இவ்விடையத்தை ஜேர்மனியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும்  தெரியப்படுத்துமாறு செயற்பாடுகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments