கல்முனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் விபத்தில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 17 திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் சேனைக்குடியிருப்பு பாடசாலைக்கு அருகாமையில் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிலும் சேனைக்குடியிருப்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிலும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
இதில் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையில் பொத்துவில் அலுவலகத்தில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கவேல் 42 வயது என்பவரே உயிரிழந்துள்ளார்
0 Comments