அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வைத்தியர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00மணி முதல் நண்பகல் 12.00மணி வரை வைத்தியர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் காரணமாக வைத்திய நடவடிக்கைகள் காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்கள் இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியர்கள் நியமனங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தே இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
0 Comments