வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து,
நீர்மின் உற்பத்தி 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணம்
என அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டார்.
வரட்சி நிலை தொடரும் பட்சத்தில்
எதிர்காலத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும்
வரையில், மின்பிறப்பாக்க செயற்பாடுகளை உரியவாறு முகாமைத்துவம் செய்வதற்கு
எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: