Advertisement

Responsive Advertisement

எதிர்வரும் வாரத்தில் நாமல் ராஜபக்ச கைது?

எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படலாம் என பிரபல வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகள் அனேகமாக பூர்த்தியாகியுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் நாமலை கைது செய்ய தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, நாமல் கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய நாமலின் உறவினர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
எனினும் அவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என நாமல் ராஜபக்ச கூறியதாக எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments