புதிய அரசியலமைப்புக்கான யோசனை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதியினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதன்போது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் யோசனையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே நேற்று இரவு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments