Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மைத்திரி மீது வெறுப்பு! மஹிந்தவுடன் கைகோர்க்கும் முக்கிய அமைச்சர்!

நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அமைச்சர் ஒருவர், கடந்த வாரம் தனது அமைச்சினுள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் தனது குடும்பத்துடன் உயர்ந்த இடத்ததிற்கு செல்ல திட்டமிட்டு முடியாமல் போயுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அமைச்சரின் ஊடக பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்லாட்சி மீது குறித்த அமைச்சர் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுவொரு நல்லாட்சியே கிடையாது. நாட்டிற்காக ஒன்றையும் செய்வதாக இல்லை. முழு நாடும் எங்களை திட்டுகின்றது. யார் என்ன சொன்னாலும், மஹிந்த தான் சரியானவர், மஹிந்த நாட்டை பொறுப்பேற்றார், பொறுப்பேற்றதற்காக எதையாவது செய்தார். குடும்ப பரம்பரையை காப்பாற்றி கொண்டார். நானும் மஹிந்த போன்றாக வேண்டும். என்னுடன் யாராவது மோதுவதற்கு வந்தால் அது தான் அவர்களுக்கு இறுதி என குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கூறிய அனைத்தையும் அமைச்சின் பாதுகாப்பு பிரிவு பதிவு செய்துள்ளதோடு அதனை அனுப்பி வைப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் தற்போது அமைதி காத்து வருவதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தவற்றை மறைப்பதற்காக செய்தியாளர் மாநாட்டுகளை ஏற்பாடு செய்து நான் ஆட்சியாளர்களுக்கு பயம் என பாடல் பாடியுள்ளார்.
மஹிந்தவுக்கு அவ்வளவு பயம் என்றால், தனது தம்பிகளை போன்று குறித்த அமைச்சரை அந்த இடத்திற்கு சென்று இணைந்து கொள்ளுமாறு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் துறைமுக அமைச்சில் ஏற்பட்ட சலசலப்புக்கு அப்பால் தொழிற்சங்கங்கள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, அது வழமை நிலைமைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments