வீட்டுப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்றுவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நீதிபதி ஆப்று தனது கைவிரல் அடையாளங்களை பொலிசாருக்கு வழங்காமல் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெளியேறிய நீதிபதி ஆப்று சில நிமிடங்களில் நீதிமன்றத்துக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டிருந்தார்.
இன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, தான் நிரபராதி எனக்கூறி ஆப்று குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
வழக்கு விசாரணை மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments