Home » » மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் நாட்டில் பாதுகாக்கப்படவேண்டும்- நத்தார் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் நாட்டில் பாதுகாக்கப்படவேண்டும்- நத்தார் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"பலவிதமான மாற்றங்களைக் கண்ட ஓர் ஆண்டின் நிறைவையும் நத்தார் தினத்தையும் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு எனது இனிய நத்தார் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் குடும்பத்தாரோடும், உறவினர்களோடும் இந்தப் பண்டிகை நாட்களைக் கொண்டாடுகின்ற தருணத்தில் இழப்பிலும், தனிமையிலும் வாடும் உறவுகளையும் எமது மனதில் நினைத்துக்கொள்ள மறவாதிருப்போமாக.
ஒப்புரவாகிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் முன்செல்கின்ற இந்தத் தருணத்தில் மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த நத்தார் தினத்திலே அனைத்து இலங்கை வாழ் மக்களும் உண்மையான சமாதானத்தையும், நம்பிக்கை இழந்து வாழ்பவர்கள் ஒரு புதிய நம்பிக்கையை நத்தார் செய்திக்கூடாக கண்டுகொள்ளவும் வேண்டும் என வாழ்த்துகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |