இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரரான குசல் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்ததை பயன்படுத்தியுள்ளதாக குசல் பெரேரா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் மருந்தின் பீசம்பல் பரிசோதனைக்காக கட்டாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி அந்த பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தையே பயன்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் அவருக்கு 4 வருடங்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: