Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 10ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வுதுறையிடம் விசாரணைக்கு சென்றபோது கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவந்தன.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை வழங்கினார்.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்டு 04.11.2014 அன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரும் மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்ற ஓப்புதல் வாக்கு மூலமொன்றை அளித்தனர்.
இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று புதன்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ் எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
Pillayan (2)

Post a Comment

0 Comments