Home » » உயர்தரம் பயிலும் மாணவன் மீது எட்டுப் பேர் கொண்ட குழு தாக்குதல்

உயர்தரம் பயிலும் மாணவன் மீது எட்டுப் பேர் கொண்ட குழு தாக்குதல்

12ஆம் ஆண்டு மாணவனுக்கு, 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்களப் பாடசாலையொன்றைச் சேர்ந்த 12ஆம் ஆண்டு மாணவனுக்கு, 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12ஆம் ஆண்டு மாணவனுக்கு 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை  தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த அகில மனோ டில்சான் சிரியானந்த (வயது 17) எனும் மாணவனே, கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.
 இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |