மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி பயிலும் செல்வன். சீ. மதுசாங்கன் அகில இலங்கை விவேகானந்த சபையால் நடாத்தப்பட்ட சைவசமய போட்டிப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அகில இலங்கை விவேகானந்த சபையால் நாடாளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் நடாத்தப்பட்ட சைவ சமய பாடப்பரீட்சையில் சித்தியடைந்து இந்த சாதனையை பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெற்றுத்தந்துள்ளார்.
இப்பாடசாலையின் அதிபர்,வி.பி.விமல்ராஜ் கற்பித்த ஆசிரியயை திருமதி ரி.கணேசலிங்கம் மற்றும் பாடசாலை நிருவாகத்தினருக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பாடசாலை பழைய மாணவர் சங்கமும் இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
0 comments: