மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போலி நாணயத் தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஓட்டமாவடி மிறாவோடைப் பகுதியில் போலி நாணயத் தாள்களை ஓவ்வொன்றாக மாற்ற முற்பட்ட போது சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர்கள் அருகில் இருந்த வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இவரிடம் இருந்து 5000 ரூபா தாள்கள் -12, 1000 ரூபா தாள்கள்- 15, 500 ரூபா தாள்கள் -6 என 78000 ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த நபரை திங்கட் கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments