எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 120 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என சோதிடர் கே.ஏ.யூ.சரத் சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையேனும் இம்முறை பெற்றுக்கொள்ள முடியாது எனவும், ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி சற்று முன்னேற்றத்தை காணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இம்முறை அவர் குறிப்பிட்டதாவது,
ரணில் விக்ரமசிங்கவே ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரான அரசாங்கத்தின் பிரதமர்.
இதற்கு 03 மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தியிருந்தால் கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கும்.
எதிர்வரும் காலம் மஹிந்த ராஜபக்சவுக்கு கெட்ட காலம் எனவும், இனி ஒரு போதும் அவரால் பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளராகும் கட்சி அவரால் தோல்வியடையும்.
தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல வழக்குகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: