Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு பெரியகல்லாறு மத்தியகல்லூரி மாணவர்களால் வித்தியாவின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் புங்குடுதீவில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்றும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெரியகல்லாறு மத்தியகல்லூரி  மாணவர்களால் இன்று காலை 11.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமானது நடத்தப்பட்டது.

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி  இன்று (20) கண்டனப் பேரணிகளும், கவனயீர்ப்பு போராட்டமும்  பாடசாலை மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது.


இந்த கொலை சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




Post a Comment

0 Comments