Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம், மைத்திரி எச்சரிக்கை

நேபா­ளத்தைப் போன்று இலங்­கையில் இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக இருப்­ப­தாக எதிர்­வு­கூ­றல்கள் விடுக்­கப்­பட்ட வண்ணம் உள்­ளன. ஆகவே் எமது இரா­ணுவ வீரர்­களும் அனர்த்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்கு தயா­ராக இருக்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

மனிதன் மனிதனுக்குச் செய்யும் சேவைகள் என்றும் அழி­யாத வண்ணம் காணப்­படும். ஆகவே நேபா­ளத்­திற்­கான எமது சேவை என்றும் அவர்­களின் இத­யங்­களின் மீது பதிந்­தி­ருக்கும்.

இந்­நி­லையில் நாட்டில் இடம்­பெற்ற 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாது­காப்­பினை உறு­திப் ­ப­டுத்­தி­ய­தனை போன்று பிராந்­திய பாது­காப்­பிற்கு எமது நாட்டின் இரா­ணுவ வீரர்­களின் பங்­க­ளிப்பு மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.

ஆகவே சர்­வ­தேச அளவில் எமது இரா­ணுவம் வளர்ச்சி காண வேண்டும். அதே­போன்று நேபாளத்தைப் போன்று இலங்கையிலும் அனர்த்தங்கள் ஏற்படுவ தற்கான எதிர்வுகூறல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆகையால் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க தயாராக வேண்டியுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments