Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இராணுவ ட்ரக் வண்டி மோதி இருவர் பலி

பொலன்னறுவை, ஜயன்திபுர பிரதேசத்தில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.எனினும் இவர்களின் இரு பிள்ளைகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இவ்விபத்திற்கு காரணமான இராணுவ ட்ரக் வண்டியின் சாரதியை இன்று காலை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ட்ரக் வண்டி மோதி இருவர் பலி
பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியில் மரதான்கடவல 62 கட்டைப்பகுதியில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில், அவர்களது 16 வயது மதிக்கதக்க மகன்கள் இருவரும் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் அவர்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியவர்கள் பொலன்னறுவை ஜயன்திபுர பகுதியை சேர்ந்தவர்களாவர்.
விபத்திற்கு காரணமாக இருந்த இராணுவ ட்ரக் வண்டியின்  சாரதியை இன்று காலை கைது செய்துள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.

Post a Comment

0 Comments