Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டாரில் நடைபெற்ற ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்- வீர வீராங்­க­னை­க­ள் கௌர­விப்பு

கட்டாரில் நடை­பெற்ற ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை அணிக்கு பதக்­கங்­களைப் பெற்­றுத்­தந்த வீர வீராங்­க­னை­க­ளுக்­கான கௌர­விப்பும் பணப்­ப­ரிசு வழங் கும் நிகழ்வும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்­றன.
இதன்­போது கட்டார் ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டப்­போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற யமா­னிக்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் ரூ.3 இலட்சம் பணப்­ப­ரிசும் பொறி­யி­ய­லாளர் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் ரூ.2 இலட்சமும் அத்­தோடு யமா­னியின் பயிற்­சி­யா­ள­ரான பண்­டா­ர­வுக்கு 75000 ரூபா பணப்­ப­ரிசும் விளை­யாட்­டுத்­துறை மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ரினால் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்­வின்­போது பேசிய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, இலங்­கையில் விளை­யாட்டு வீரர்­களை ஊக்­கு­விப்­ப­தற்கும் அவர்கள் சாதனை படைப்­ப­தற்கும் தன்­னா­லான அனைத்து செயற்­பா­டு­க­ளையும் எவ்­வித தயக்­க­மு­மின்றி முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­வித்தார்.
நாட்டில் பல சிறந்த வீர வீராங்­க­னைகள் இருக்­கி­றார்கள். இவர்­களை இனங்­கா­ணு­வ­துதான் எமது முக்­கிய திட்­ட­மாக இருக்­கின்­றது. அவ்­வாறு இனங்­கா­ணப்­பட்ட பின் அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்­தையும் நாம் செய்­து­கொ­டுக்க கட­மை­ப்பட்­டி­ருக்­கிறோம்.
கத்­தாரில் நடை­பெற்ற கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டியில் இலங்­கைக்கு தங்­கப்­ப­தக்கம் கிடைத்தது என்ற செய்­தியை கேட்­ட­வுடன் நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். அதே­நேரம் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக பெரு­மையும் கொள்­கிறேன்.
இது ஆரம்பம் மட்­டுமேஇ இன்னும் இன்னும் நாம் சாதிக்க நிறைய இருக்­கின்­றது. அதை­நோக்­கித்தான் தற்­போ­தைய எமது பய­ணத்­திட்டம் அமைந்­துள்­ளது.
எதற்கும் அச்சம் கொள்­ள­வேண்டாம் என்று வீர வீராங்­க­னை­களை அறி­வு­றுத்­திய அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க எந்­த­வி­த­மான சவால்கள் வந்­தாலும் அதை எதிர்த்து போராடும் தன்­மையை நாம் வளர்த்­துக்­கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரி­வித்தார்.
முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்த மூன்று வீரர்­க­ளுக்கும் பணப்­ப­ரிசு அமைச்­சர்­க­ளினால் வழங்­கப்­பட்­டது.
ஆண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் வெள்ளிப்­ப­தக்­கத்தை வென்­றெ­டுத்த ரொஷான் தம்­மிக்க ரண­துங்க கொடக்கா, ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வெள்­ளிப்­ப­தக்கம் வென்­றெ­டுத்த சமல் குமா­ர­சி­றிக்கும் 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்டப் போட்­டியை 52.88 செக்­கன்­களில் நிறைவு செய்து வெள்ளிப்­ப­தக்கம் வென்­றெ­டுத்த எம். எஸ். ராஜ­ப­க் ஷ­வுக்கும் தலா ரூ.2 இலட்­சம் வீதம் வழங்­கப்­பட்­டது. அத்­தோடு இவர்­களின் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பணப்­ப­ரி­சு வழங்­கப்­பட்­டது.
42 நாடுகளைச் செர்ந்த 750 இற்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் கலந்துகொண்ட இப் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அத்துடன் 27 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments