கொழும்பின் பாதுகாப்பு பணிகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கொழும்பு நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மே தினக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹைட் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொலிஸ் மோப்ப நாய்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments: