Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவுக்கு மட்டக்களப்பில் வக்காளத்து வாங்கியவர்களுக்கு எமது மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் நவம் M.P

கடந்த 10 ஆண்­டு­க­ளாக சிறு­பான்மை இனங்கள் பட்ட கஷ்­டங்­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே கடந்த ஜனா­திபதித் தேர்தல் முடிவு அமைந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த மாற்­றிய அர­சியல் யாப்பே அவரின் அர­சியல் வாழ்­விற்கு சாவு­மணி அடித்­தி­ருக்­கின்­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராசா தெரிவித்தார்.
மட்­டக்­க­ளப்பு மேற்கு கல்­வி­வ­ல­யத்­திற்­குட்­பட்ட காயான்­குடா கண்­ணகி வித்­தி­யா­லயத்தில் இடம்­பெற்ற வரு­டாந்த மெய்­வல்­லுனர் விளை­யாட்டுப் போட்டி நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யா ற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
எமது மாவட்டம் கல்­வியில் சிறி­த­ளவு வீழ்ச்சி கண்ட மாவட்­ட­மா­கவே திகழ்­கின்­றது. இதற்கு எமது நாட்டில் இடம்­பெற்ற 35 வருட யுத்­தமும் ஒரு கார­ணி­யாக இருக்­கலாம். இந்த யுத்தம் எமது கல்­வியில் மாத்­திரம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூ­கத்தின் வாழ்­வா­தாரம், பொரு­ளா­தாரம், சொத்து, சொந்தம் எல்­லா­வற்­றிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
ஏறக்­கு­றைய 65 வரு­ட­கா­ல­மாக நாம் மாறி மாறி வந்த அர­சாங்­கங்­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­பட்ட சமூக­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். இந்த புறக்­க­ணிப்பின் கார­ண­மா­கத்தான் எமது சமூகம் போராட்ட சூழ­லுக்குள் தள்­ளப்­பட்­டது. ஆரம்­பத்தில் சாத்­வீக ரீதியில் போரிட்­டாலும் அது பலன் ­கொ­டுக்­காமையால் எமது இளை­ஞர்­களை ஆயுதப் போராட்­டத்­திற்குள் நுழைத்­தது.
இந்த ஆயுதப் போராட்­டமும் 2009ஆம் ஆண்­டுடன் முடி­வுற்­றது. இந்த நாட்டின் தமிழ் மக்­களின் தலை­வி­தியை தீர்­மா­னிக்­கின்ற பாரிய பொறுப்பு எமது வடக்கு கிழக்கு மக்­களால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­திகள் என்ற ரீதியில் வழங்­கப்­பட்­டது. அது கடந்து வந்த தேர்தல்­களில் எமது மக்­களால் தெரியப்­ப­டுத்­தப்­பட்டு வரும் உண்­மை.
வடக்­கினை விட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசி­யத்­திலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிலும் ஆர்வம் கொண்ட மக்­க­ளாக கடந்த பல தேர்தல்களில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள் 2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தலிலும் சரி 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற மாகா­ண­சபைத் தேர்தலிலும் சரி எமது மக்கள் தங்­க­ளது வாக்­கு­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கே வழங்­கி­யி­ருப்­பது இத­னையே காட்­டு­கின்­றது.
தமி­ழனை தமி­ழ­னாக வாழ வைக்கும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தவிர வேறு எந்தக் கட்­சியும் இருக்க முடி­யாது. தற்­போ­தைய நிலையில் நாம் எமது பிரச்­சினை தொடர்பில் உள்­நாட்டில் நம்­பிக்கை இழந்து சர்­வ­தே­சத்தை நாடி­யி­ருக்­கின்றோம். இந்த மாதம் ஐக்­கிய நாடுகள் சபையால் இலங்கை இனப்­ப­டு­கொலை தொடர்பில் சமர்ப்­பிக்­கப்­பட இருந்த அறிக்கை தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமை­வாக ஆறு மாதங்கள் பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. இது எமக்கு வேதனை தரக் கூடிய விட­ய­மா­கவே இருக்­கின்­றது.
இருப்­பினும் இது தொடர்பில் எமது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கடந்த ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி ஐக்­கி­ய ­நா­டுகள் சபையின் ஆணை­யா­ள­ருக்கு தனிப்­பட்ட ரீதியில் கடிதம் மூலம் தெரிவித்­தி­ருந்தார். ஐக்­கிய நாடுகள் சபையின் நிர­லின்­படி குறிப்­பிட்ட தினத்தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி அதற்கு ஆணை­யா ளரினால் கிடைக்­கப்பெற்ற பதில் கடி­தத்தில் இந்த ஒரு­முறை மாத்­தி­ரமே சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் இனி சந்­தர்ப்பம் கொடுக்கமாட்டோம் என்று தெரிவித்­தி­ருந்தார்.
இந்த நிலையில் எமது இனம் இந்த பிற்­போ­டுதல் தொடர்பில் கவலை கொண்­டுள்­ளது. நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடை­கின்­றோமோ என்ற கவலை எமது மக்கள் மத்­தியில் நில­வு­கின்­றது. ஆனால் ஆணை­யா­ளரின் இத்­த­கைய கருத்­தா­னது எமது மக்­களின் கவ­லையை சற்று போக்கக் கூடிய நம்­பிக்­கையை கொடுக்­கின்­றது.
யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட இனம் அத­னையும் விட கடந்த 10 வரு­டங்­க­ளாக அரச பயங்­க­ர­வா­தத்தால் ஆட்­கொள்­ளப்­பட்டு பல வேத­னை­க­ளையும் சோதனை­க­ளையும் அனு­ப­வித்தோம். யுத்தம் முடி­வுற்­றதும் தமி­ழ­ருக்கு ஏற்­பட்ட இந்த இக்­கட்­டான நிலையில் தான் பல கைதுகள், கடத்­தல்கள், காணாமல்போதல் என்­பன இடம்­பெற்றன. இவர்­களால் கைது செய்­யப்­பட்ட எமது இளை­ஞர்கள் இன்னும் சிறை­களில் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
இந்த நிலையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த ஆட்சி மாற்றம் எமது இளை­ஞர்­களை விடு­விக்கும் என எதிர்­பார்க்­கின்றோம். தற்­போது வந்­துள்ள புதிய அர­சாங்கம் எமது இளை­ஞர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு மூலம் விடு­தலை வழங்க வேண்டும். அன்று மக்கள் விடு­தலை முன்­னணியில் கைது செய்­யப்­பட்ட சிங்­கள இளை­ஞர்­களை அந்த அரசு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை கொடுத்­­தது என்றால் ஏன் எமது இளை­ஞர்­க­ளுக்கு அவ்­வா­றா­ன­தொரு விடு­த­லை­யை வழங்க முடி­யாது.
இவ்­வாறு எமது மக்­களின் அபி­லா­ஷைகள் பல நிறை­வேற்­றப்­பட வேண்டும் அதனை நாம் தற்­போ­துள்ள அர­சாங்­கத்­திடம் உந்­துதல் கொடுத்து அவற்றை நிறை­வேற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே புதிய மாற்­றம் பெற்ற அர­சாங்­கத்தில் எமக்கு தரு­வ­தாக கூறிய அமைச்சுப் பத­வியை தவிர்த்தோம். ஏனெனில் எமது இலக்கு வேறு எமக்கு தரு­கின்ற அமைச்சுப் பதவி எம்மைக் கட்­டுப்­ப­டுத்தும் இந்த அரசு ஏதும் தவறு விடும் பட்­சத்தில் அதனை தட்டிக் கேட்க முடி­யாமல் எமது வாய்கள் இந்த அமைச்சின் மூலம் அடைக்­கப்­படும் எனவே நாம் இதனை ஏற்­கா­மையால் அரசு அதன் கட்­டுப்­பா­டு­களை எமக்கு திணிக்க முடி­யாது. இந்த நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக எந்த அர­சாங்கம் செயற்­பட்­டாலும் அதனை முதலில் தட்டிக் கேட்கும் கட்சி எமது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தவிர வேறு எந்தக் கட்­சி­யா­கவும் இருக்க முடி­யாது.
தற்­போது புதிய அர­சாங்கம் எமது மக்­களின் காணி­களை மீளக்­கை­ய­ளிப்­ப­தா­கவும், கைது செய்­யப்­பட்ட எமது இளை­ஞர்­களை விடு­விப்­ப­தா­கவும் தெரிவித்து அதற்கு முன்­னேற்­பா­டாக சில செயற்­திட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. இது எமக்கு மகிழ்ச்­சியைத் தரு­வ­தோடு இதனை நாம் வர­வேற்­கின்றோம்.
இவ்­வா­றான இலக்­குகள் படிப்­ப­டி­யாக முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் எமது பாரிய இலக்­கான இனப்­பி­ரச்­சினை தொடர்பில் எமது காய்­ந­கர்த்­தல்கள் செல்லும். எமது நாட்டில் வெள்ளையரின் ஆட்­சியில் இருந்து சுதந்­திரம் பெற்ற நாளில் இருந்து எமது இனப்­பி­ரச்­சி­னை­ தோற்றம் பெற்­றது. இதனை முடி­வுக்கு கொண்­டு­வரும் வல்­லமை இருந்தும் இங்கு ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­களின் புறக்­க­ணிப்­பினால் பல்­வேறு அழி­வு­களை சந்­தித்தோம். இறு­தியில் முள்­ளி­வாய்க்­காலில் எமது பல ­இலட்சம் உற­வுகள் காவு­கொள்­ளப்­பட்­டன. இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட்­டி­ருந்தால் இத்­தனை உற­வுகள், உடை­மைகள் எம்மை விட்டு பிரிந்­தி­ருக்­காது.
இப்­பி­ரச்­சினை தொடர்பில் பல ஒப்­பந்­தங்கள் வரை­யப்­பட்­டன. வரை­யப்­பட்ட மாத்­தி­ரத்­தி­லேயே அவை மீறப்­பட்­டன கிழித்தும் எறி­யப்­பட்­டன. இவ்­வா­றா­ன­தொரு நிலை மீண்டும் எமது மக்­க­ளுக்கு ஏற்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே இந்த மாற்றம் பெற்ற அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கிக் கொண்டு இருக்­கின்றோம் நன்மை கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்­புடன்.
இன்று பலரின் ஆட்­டங்கள் முடக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன சென்ற ஆட்­சியில் மஹிந்­தவுக்கு ­மட்­டக்­க­ளப்பில் வக்­கா­ளத்து வாங்­கி­ய­வர்­க­ளுக்கு எமது மக்கள் தகுந்த பாடம் கற்­பித்­துள்­ளனர். எமது மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எமது மக்கள் ஆனால் அப்­போது இருந்த மீள்­கு­டி­யேற்றப் பிர­தி­ய­மைச்­ச­ரினால் எமது மக்­க­ளுக்கு ஒரு வீடு கூட கட்டிக்கொடுக்­க­ப்படவில்லை. எங்கோ இருக்­கின்ற இந்­தியா எமது மக்­க­ளுக்கு கொடுத்த வீட்டை தாம் வழங்கியதாக பெருமிதம் கொண்டு திரிந்தனர்.
ஆனால் மணலாறு எனப்படும் எமது தமிழ் பிரதேசத்தினை வெலிஓயா என்ற சிங்கள கிராமமாக பிரகடனப்படுத்தி பெரும்பான்மை இன மக்களுக்கு அந்த அமைச்சு 1000 வீடுகளைக் கட்டிக் கொடுத்தி ருக்கின்றது. இவ்வாறே எமது மக்களை ஏமாற்றி வந்தனர். அந்த தஸ்தாவேஜுகளுக்கு எமது மக்கள் கொடுத்த பலாபலனே கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு.
இவ்வாறான நிலையில் தான் கடந்த 10 ஆண்டுகளாக பரிதவித்தோம். இதன் காரணமாகவே எமது நாட்டின் சிறுபான்மை இனங்கள் அனைத்தும் சேர்ந்து அன்றைய அரசை ஓரம் கட்ட நினைத்து அதன் ஆட் சியைப் பறித்தன. மஹிந்த மாற்றிய அரசி யல் யாப்பே அவரின் அரசியல் வாழ்விற்கு சாவுமணி அடித்திருக்கின்றது என்றார்.

Post a Comment

0 Comments