Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சபையில் எதிர்க்கட்சி தலைவர் நிமல்

முறை­கே­டான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனை பாது­காக்கும் முயற்­சியில் பிர­தமர் ஈடு­பட்டு வரு­வ­தோடு நான் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதில்­களை பிர­தமர் வழங்­க­வில்லை என எதிர்க்­கட்சித் ­த­லைவர் நிமல் ­சிறி பாலடி சில்வா நேற்று சபையில் குற்­றஞ்­சாட்­டினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 23 இன் கீழ் இரண்டில், எதிர்­க்கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா முன்­வைத்த விசேட கூற்று தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பதி­லையே அவர் மேற்­கண்­ட­வாறு விமர்­சித்தார். சபையில் 23/2 இல் விசேட கூற்றை முன்­வைத்து உரை­யாற்­றிய எதிர்க்­கட்சி தலைவர் இலங்கை மத்­திய வங்­கி­யி­லி­ருந்து 124 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வெளி­யேற்­று­வ­தற்கு மத்­திய வங்கி ஆளு­நரினால் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.
இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யது யார்? என கேள்­வி­யெ­ழுப்­பிய எதிர்க்­கட்சி தலைவர் தனது உரையில் தொடர்ந்து குறிப்­பிட்­ட­தா­வது,
மத்­திய வங்­கியி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட பிணை முறி­வுகள் தொடர்பில் சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. இந்த கொடுக்கல் வாங்­கல்­களில் முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ளன.
இந்­தப்­பிணை முறி­வுகள் எவ்­வாறு விநி­யோ­கிக்­கப்­பட்­டது. அதற்­கான அடிப்­படை என்ன? மத்­திய வங்­கி­யி­லி­ருந்து அமெ­ரிக்க டொலர் 124 பில்லியன் வெளியே கொண்­டு­வ­ரப்­பட்­டதா.
மத்­திய வங்கி ஆளு­நரின் நட­வ­டிக்கை தொடர்­பாக நியா­ய­மான விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும்.
தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை குழுவை நம்ப முடியாது. தேர்தலுக்கு நாம் பயப்படவில்லை தயாராகவே இருக்கின்றோம். அத் தேர்தலில் ஐ.தே.கட்சியை தோல்வியடைய செய்வோம் நாம் வெற்றியடைவோம் என்றார்.

Post a Comment

0 Comments