இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பெற்றுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு பூரண ஆதரவு தெரிவித்து அவர் வெற்றியும் பெற்றுவிட்டார் இன்று வரை எமது தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை. இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை.
இவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ்ச் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள் இதற்காகவா எமது தமிழ்ச் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தது.
மாகாணசபை முறைமை தமிழ்ச் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள், ஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளூராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமூடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடி வில் தான் எதுவும் செய்ய முடியாது. என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? இது தானா? தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லா வற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் இவர்கள் இரட்டை வேடம் போடுவதை இனியும் தமிழ்ச் சமூகம் அனு மதியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments