Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்பந்தனின் தலைமையை மக்கள் ஏற்றுள்ளார்கள்! சுமந்திரன் யாழில் போட்டி

ஈழத்தில் ஜனநாயகம் தளைத்தோங்குகிறது என்பதைக் காட்டுவதாகவே அங்கு இடம்பெறும் உருவப் பொம்மைகள் எரிப்புப் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. ஆனால் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரிக்கும் செயல்கள் மக்களின் எழுச்சியால் இடம்பெறவில்லை.
என லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
யாழ் தேர்தல் மாவட்டப் பிரதிநிதித்துவம் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதில் இருந்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களாகக் குறைகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யார் போட்டியிடுவது என்ற குழப்பங்களை போட்டியிட விருப்புக் கொண்டோர் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2010ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 6 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்றது. இந்த வாக்குகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததால். இதனால் ஈ.பி.டி.பி இன்னொரு ஆசனத்தை கைப்பற்றியது.
அதுபோலவே இந்த முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகிறது. ஈ.பி.டி.பி அல்லது ஐ.தே.கவிற்கு இது மிகவும் சாதகமாக அமைந்து அவர்களிற்கு மேலதிக ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்பது உள்ளிட்ட பல மிகமுக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

0 Comments