பிரிட்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 05 ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்றைய தினம் மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் இலங்கைப் பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கொலைச் சந்தேகத்தின் பேரில் கொவன்றி, பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பேர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 20, 31 மற்றும் 39 வயதுடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
0 Comments