நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 534150 வாக்காளார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் 13615 பேர் தபால் மூல வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளில் 423 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 302836 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கொத்மலை தேர்தல் தொகுதியில் 78068 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 82193 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 71053 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 213 வாக்களிப்பு நிலையங்களும் கொத்மலை தேர்தல் தொகுதியில் 73 வாக்களிப்பு நிலையங்களும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 71 வாக்களிப்பு நிலையங்களும் அத்தோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 10 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் 5100 பேர் கடமையாற்றவுள்ளதோடு வாக்கு எண்ணும் நிலையங்களில் 1600 பேர் கடமையில் ஈடுப்படவுள்ளனர்.


மட்டக்களப்பிலும் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தடைந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள 100 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வந்தடைந்தன.
களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த பட்டிருப்பு தேர்தல் தொகுதி உள்ளது.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் அனைத்துப் பகுதிக்குமான வாக்களிப்பு பெட்டிகள் இன்று பிற்பகல் வந்தடைந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 172497 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 105055 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 87611 பேருமாக மொத்தம் மட்டக்களப்பு மாவடத்தில் 365163 பேர் இம்முiறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 365,163 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளததையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments