கள்ள வாக்கு போட முயற்சிப்பவா்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்துமாறு தோ்தல் ஆணையாளா் ஆணையிட்டுள்ளாா். அவ்வாறான நபர்களை தலையில் சுடுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தளவு பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவை, அவசியமான அதிகாரமே.
முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டால் தலையில் சுட வேண்டும்.
தேர்தலை குழப்ப முயற்சிப்பவர்களின் முழங்காலின் கீழ் சுட வேண்டியதில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசித்து குழப்பங்களை விளைவித்தால் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி முழங்காலின் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் உண்டா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments