Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சாதனையாளர் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  பட்டிருப்பு தொகுதி கிளை ஏற்பாடுசெய்திருந்த தரம்  ஐந்து புலமைப் பாரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை  கௌரவிக்கும்  நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில்அண்மையில் நடைபெற்றது.


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் .

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

நிகவிற்கு சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் உலகசேகரம் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளால் குறித்த பரீட்சையில் சித்தியடைந்த நூறு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.









Post a Comment

0 Comments