Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளம் விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


நேற்று இரவு 10.00மணியளவில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


கிரான்குளம் வளைவு பகுதியில் வீதியோரமாக உரையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு வேகமாக சென்ற வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது படுகாயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் கிரான்குளம்,ஆலையடிவீதியை சேர்ந்த உருத்திரநாதன்(22வயது) எனவும் படுகாயமடைந்தவர்கள் கிரான்குளம் பிரதான வீதியை சேர்ந்த சுரேஸ்குமார்(21வயது),வீச் வீதியை சேர்ந்த பிரதீபன்(24வயது)எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments